நவராத்திரி பாடல்கள்! – Navarathri Songs!

அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
திருவடி இணை துணையென் (அம்பா)

வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக்குயிலே ஷங்கரி ஜகதம்பா (மனம்)

பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீ*ஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)