நவராத்திரி பாடல்கள்! – Navarathri Songs!

நீ இரங்காயெனில் புகலேது அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்)

தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்)

பாற்கடலில் உதித்த திருமளியே -
பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்