Category Archives: Nakshatras

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப் பாடல்கள்

உங்கள் நட்சத்திரப் பாடல்களுடன் சிவ வழிபாடு:

black_stone_shiva_linga_rp01

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

தகவல் உதவி: ‘பால ஜோதிடம்’ பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010

அசுவினி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
பரணி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
கார்த்திகை/கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
ரோகிணி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
மிருக சீரிடம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
திருவாதிரை/ஆதிரை நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
புனர்பூசம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
பூசம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
ஆயில்யம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
மகம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
பூரம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
உத்திரம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
அஸ்தம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
சித்திரை நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
சுவாதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
விசாகம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
அனுஷம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
கேட்டை நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
மூலம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
பூராடம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
உத்திராடம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
திருவோணம்/ஓணம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
அவிட்டம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
சதயம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்
ரேவதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

ரேவதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lord-shiva-69d

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.

உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

Lord-Siva-in-behind-of-pothigai-hill-view

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lord-shiva-hd-wallpaper-free-download7

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

சதயம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lord-shiva (1)

கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

அவிட்டம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lor17v

எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

திருவோணம்/ஓணம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

guru god wallpapers collections (7)

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

உத்திராடம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

goddess-parvati-lord-shiva-son-sri-ganesh

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

பூராடம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

indian_hindu_god_lord_eswara_siva_lingam_nanthi_image_high_resolution_desktop_wallpaper

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

மூலம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

Shiva-Lingam

கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.